வடக்கு மாகாணத்தில் பராமரிப்பின்றியுள்ள மக்களின் காணிகளை அரசுடமையாக்க வேண்டும். இப்படிக் கூறுகின்றார் வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்.வடக்கு மாகாண சபையின் அடுத்தாண்டு க்கான வரவு –செலவுத்திட்டத்தில் சுகாதார அமைச்சு மீதான விவாதம் நேற்றைய தினம் மாகாண சபையில் இடம்பெற்றது. இந்த அமர்விலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
வடக்கு மாகாணத்தில், மக்களின் காணிகள் பல கவனிப்பாரற்று எந்தவித பராமரிப்பும் இல்லாமல் காணப்படுகின்றன. அவ்வாறான காணிகளில்தான் டெங்கு, மலேரியா நுளம்புகளின் பெருக்கம் காணப்படுகின்றது. எனவே அவற்றை பிரதேச சபைகள் கையகப்படுத்தி துப்புரவு செய்ய வேண்டும்.
மக்கள் காணிகளுக்கு உரிமை கோரி வந்தால் பிரதேச சபைகள் தாம் செலவழித்த பணத்தை அறவிட வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் ஊடாக டெங்கு நுளம்புகளை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். அத்துடன் வடக்கு மாகாணத்தில் டெங்குக் கட்டுப்பாட்டுக்கு இராணுவத்தினர், கடற்படையினர் ஆகியோரை பயன்படுத்து வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
Post a Comment