
தமிழகத்தை பொறுத்தவரை, இடைத்தேர்தல் என்றால், ஆளும்கட்சி தான் வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. அதை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறியடித்துள்ளது. அதேபோல், இரட்டை இலை, உதயசூரியன் சின்னம் இருந்தால், வெற்றி எளிதாகி விடும் என்ற, நம்பிக்கையும் பொய்யாக்கப்பட்டுள்ளது. சின்னம், ஒரு பொருட்டல்ல என்பதை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் உணர்த்தி உள்ளது.
ஆர்.கே.நகருக்கு, மார்ச் மாதம், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தினகரன், 'தொப்பி' சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது ஓட்டுக்கு, 4 ஆயிரம் ரூபாய் வழங்கினார். இதனால், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. எனவே, இம்முறையும், 'தொப்பி' சின்னம் பெற முயற்சித்தார். அதை பெற, சுயேச்சை வேட்பாளர்களிடமும் போட்டி ஏற்பட்டது. இதன் காரணமாக, தினகரனுக்கு, தொப்பி கிடைக்கவில்லை. 'குக்கர்' சின்னத்தில் போட்டியிட்டு, தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.
தொப்பி சின்னத்தை கேட்டு பெற்ற வேட்பாளர், ரமேஷ், 445 ஓட்டுகளை தான் வாங்கினார். எனவே, வேட்பாளரின் வெற்றிக்கு, சின்னம் பொருட்டல்ல என்பதை, ஆர்.கே.நகர் மக்கள் உணர்த்தி உள்ளனர்.
ஒரே பெயரில்... அதேபோல், வெற்றி பெறக்கூடிய வேட்பாளர் பெயரில் உள்ளவர்களை, சுயேச்சையாக களமிறக்கினால், வாக்காளர்கள் குழப்பம் அடைவர் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்து போனது.
சுயேச்சையாக போட்டியிட்ட, கே.தினகரன், 104; எம்.தினகரன், 138 ஓட்டுகள் பெற்றுள்ளனர். அதேபோல், சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட்ட, எஸ்.மதுசூதனன், 59; ஆர்.மதுசூதனன், 137 ஓட்டுகளை மட்டும் பெற்றனர்
Post a Comment