Ads (728x90)

பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை அடுத்­த­வாரம் சபா­நா­ய­க­ரிடம் சமர்ப்­பிப்போம். என்­றாலும் அதனை விவா­தத்­துக்கு எடுத்­துக்­ கொள்­வது சந்­தேகம் என ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.

மத்­திய வங்கி பிணை­முறி தொடர்பில் கூட்டு எதிர்க்­கட்சி பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னத்தை  கொண்­டு­வர தீர்­மா­னித்­தி­ருப்­பது தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

மத்­திய வங்கி பிணை­முறி மோச­டியில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பிர­தான பொறுப்­பு­தாரி என அனை­வரும் ஏற்­றுக்­கொள்­கின்­றனர். அவ்­வாறு இருக்­கையில் அவர் அந்த பத­வியில் தொடர்ந்து இருக்­க­மு­டி­யாது. பொது­வாக அமைச்சர் ஒரு­வ­ருக்கு எதி­ராக ஊழல் மோசடி குற்­றச்­சாட்டு தெரி­விக்­கப்­பட்டால் அது தொடர்­பாக விசா­ர­ணை­களை சுதந்­தி­ர­மாக மேற்­கொள்ள குறித்த அமைச்சர் அந்த பத­வியில் இருக்க முடி­யாது.

அவ்­வாறே தற்­போது மத்­திய வங்கி பிணை­முறி மோசடி விவ­கா­ரத்தில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக பல­மான குற்­றச்­சாட்­டுக்கள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. அர­சாங்­கத்தில் இருப்­ப­வர்­களே அதனை தெரி­விக்­கின்­றனர். இவ்­வா­றான நிலையில் மத்­திய வங்கி மோசடி தொடர்­பாக நீதி­யான விசா­ரணை இடம்­பெ­ற­வேண்­டு­மாக இருந்தால் ரணில் விக்­ர­ம­சிங்க பிர­தமர் பத­வியில் இருந்து தற்­கா­லி­க­மா­க­வேனும் விலகி வேறு ஒரு­வ­ருக்கு அதனை வழங்க நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­க­வேண்டும்.

ஆனால் பிர­தமர் அவ்­வாறு செய்­யாமல் தொடர்ந்து அந்த பத­வியில் இருந்­து­கொண்டு விசா­ர­ணை­க­ளுக்கு தடை­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்றார். அத்­துடன் பாரா­ளு­மன்­றத்­தையும் பிழை­யாக வழி­ந­டத்த முயற்­சிக்­கின்றார். அத­னாலே கூட்டு எதிர்க்­கட்சி பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை ஒன்றை கொண்­வர தீர்­மா­னித்­தது. குறித்த பிரே­ர­ணைக்கு கூட்டு எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கைச்­சாத்­திட்டு வரு­கின்­றனர். எதிர்­வரும் வார­ம­ளவில் அதனை சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­க­வுள்ளோம்.

என்­றாலும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை பாரா­ளு­மன்­றத்­துக்கு கொண்­டு­வர அர­சாங்கம் எங்­க­ளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்போவதில்லை. ஏனெனில் அமைச்சர் ராஜித்தவுக்கு எதிராக கொண்டுவரப்பபட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியும். அதே நிலைதான் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்ககையில்லா பிரேரணைக்கும் ஏற்படும் என்றார்

Post a Comment

Recent News

Recent Posts Widget