Ads (728x90)

இராணுவத்தின் பிடியில் உள்ள மயிலிட்டி காச நோய் வைத்தியசாலை விரைவில் சுகாதாரத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சுத் தகவல்கள் இதனைத் தெரிவித்தன.

‘‘காசநோய் வைத்தியசாலையை உடனடியாகவே விடுவிப்பதற்கான ஏற்பாடுகளே இடம்பெறுகின்றன’’ என்று அவை தெரிவித்தன.
வடக்கு மாகா­ணத்­தில் காச நோய் சிகிச்­சைக் காக இருந்­தது இந்த வைத்­தி­ய­சாலை ஒன்றே. எனி­னும் கடந்த 30 வரு­டங்­க­ளுக்கு மேலாக அது இரா­ணுவ உயர் ◌பாது­காப்பு வல­யத்­தில் சிக்­கிக்­கொண்­டது. இத­னால் காச நோய் சிகிச்­சைக்கு வடக்­கில் போதிய வச­தி­கள் இருக்­க­வில்லை.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் காங்­கே­சன் துறை­மு­கத்தை அண்­டி­யுள்­ளது மயி­லிட்டி. இங்கே காச நோய் வைத்­தி­ய­சாலை அமைந்­துள்­ளது. நீண்­ட­கா­லக் கோரிக்­கை­கள், போராட்­டங்­க­ளின் பின்­னர் மயி­லிட்டி துறை­மு­க­மும் அத­னைச் சுற்­றி­யுள்ள சிறிய பகு­தி­யும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விடு­விக்­கப்­பட்­டது.

எனி­னும் காச­நோய் வைத்­தி­ய­சா­லை­யும் அத­னைச் சுற்­றிய பகு­தி­க­ளும் விடுக்­கப்­ப­ட­வில்லை. அது இரா­ணு­வத் தேவை­க­ளுக்­கா­கத் தொடர்ந்­தும் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தது.

Post a Comment

Recent News

Recent Posts Widget