வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினரின் போராட்டம் இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்தே அனைத்துப் பேருந்துச் சேவைகளும் இடம்பெறவேண்டும் என்ற வடக்கு முதலமைச்சரின் இறுக்கமான கட்டளையை அடுத்து இ.போ.சவினர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை நேற்று ஆரம்பித்தனர். தமது கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்திருந்தனர்.
முதலமைச்சர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளாத காரணத்தால் இன்றும் அந்தப் போராட்டம் தொடரவுள்ளது என வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க பொதுச் செயலர் அருளானந்தம் உதயன் பத்திரிகையிடம் தெரிவித்தார்.
Post a Comment