பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களை எரிப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.இதனால் வளி மாசடைவு ஏற்படுவதோடு புற்றுநோய், பக்கவாதம், நீல நிறம் கொண்ட சிசு பிறப்பு உள்ளிட்ட பல சுவாச நோய்கள் உண்டாகுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் மேற்படி சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
வீடுகளில் கூட இத்தகைய பொருள்களை எரிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய சுற்றாடல் சட்டத்தின் பிரகாரம் சிறைத்தண்டனை அல்லது 10 லட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்படுமென அதிகார சபை அறிவித்துள்ளது.
Post a Comment