“நில செவன ” வேலைத்திட்டத்தின் கீழ் அரசபணியாளர்களுக்கான சொந்த வீடு வழங்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.புதிய வருடத்துக்கான அரச சேவைகளை நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“ கடந்த 3 வருடமாக 14 இலட்சம் அரச பணியாளர்களை கௌரவப்படுத்தும் வகையில் அவர்களுக்கான கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க இந்த அரசால் முடிந்தது. அதேபோல் இந்த வருடத்தில் ஊழல், மோசடியற்ற அரச பணியாளர்களை உருவாக்குவதையே எதிர்பார்க்கின் றோம்” என்றார்.
Post a Comment