சமூகவலைத் தளத்தில் தேர்தல் பரப்புரை நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று தேர்தல்கள் திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, சம்பந்தப்பட்ட கிராம அலுவலர் பிரதேச செயலகத்துக்கு மீள அழைக்கப்பட்டுள் ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசியல் கட்சி ஒன்றுக்கு ஆதரவாக கிராம அலுவலர் சமூக வலைத் தளத்தில் பரப்புரை மேற்கொண்டார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்டத் தேர்தல்கள் திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றதை அடுத்து இது தொடர்பில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன் பின்னர், சம்பந்தப்பட்ட கிராம அலுவலர் அவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு பிரதேச செயலகத்திற்கு மீள அழைக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
Post a Comment