Ads (728x90)

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தொடர்­பாக சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்­கள், அறிக்­கை­களை வெளி­யி­டக் கூடாது என்று ஐக்­கிய தேசி­யக் கட்சி அமைச்­சர்­கள் மற்­றும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­லவை விமர்­சித்­த­மைக்கு அவ­ரி­டம் மன்­னிப்­புக் கோர­வேண்­டும் என்­றும் பணித்­துள்­ளார். ஐக்­கிய தேசி­யக் கட்­சி உறுப்பினர்களுக்கும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்­கு­மி­டையே ஏற்­பட்­டுள்ள சொற்­போரை முடி­வுக்­குக் கொண்­டு­வந்து கூட்டு அரசை 2020ஆம் ஆண்­டு­வரை கொண்­டு­ செல்­லும் நோக்­கி­லேயே ரணி­லால் இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால, ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் இளம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தன்­னைத் தரக் குறை­வா­கப் பேசி­யமை தொடர்­பில் கருத்­துக்­களை முன்­வைத்­தார். அவர் தனது உரையை முடித்­த­தும் அங்­கி­ருந்து வெளி­யே­றி­யி­ருந்­தார். தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவ­ரைச் சமா­தா­னப்­ப­டுத்தி அழைத்து வந்­தி­ருந்­தார். இந்த நிலை­மை­யால் கூட்­ட­ர­சுக்கு நெருக்­கடி ஏற்­பட்­டி­ருந்­தது.

பர­ப­ரப்­பான அர­சி­யல் சூழ்­நி­லை­யில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மத்­திய செயற்­கு­ழுக் கூட்­டம் நேற்று முற்­ப­கல் 10 மணிக்கு கட்­சித் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தா­வில் கூடி­யது. தேர்­தல் காலம் என்­ப­தால் பெரு­ம­ள­வா­னோர் அந்­தக் கூட்­டத்­தில் பங்­கேற்­க­வில்லை.

அரச தலை­வர் மைத்­தி­ரி­யி­ன­தும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­ன­ர­தும் செயற்­பா­டு­கள் தொடர்­பில் அமைச்­சர்­க­ளும், தலைமை அமைச்­சர் ரணி­லுக்­கும் இடை­யில் வாக்­கு­வா­தம் மூண்­டுள்­ளது. ரணில் அமைச்­சர்­க­ளைச் சமா­தா­னப்­ப­டுத்­தி­யுள்­ளார். சிறப்பு உரை­யை­யும் ரணில் நிகழ்த்­தி­யுள்­ளார்.

தேர்­தல் பரப்­புரை நட­வ­டிக்­கை­க­ளின் போது எந்­தக் கார­ணம் கொண்­டும் மைத்­தி­ரியை எதிர்த்து பேச கூடாது. சுதந்­திர கட்சி அமைச்­சர்­கள் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­தால் அவர்­க­ளுக்­குப் பதில் வழங்­குங்­கள். அதற்கு மாறாக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை விமர்­சிப்­பதை உடன் நிறுத்த வேண்­டும்.

மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரம் தொடர்­பி­லான ஆணைக்­கு­ழு­வின் அறிக்­கைக்கு ஐக்­கிய தேசி­யக் கட்சி அறிக்­கை­யொன்­றின் மூல­மாக உரிய பதிலை வழங்­கும். அத­னால் ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு பாதிப்­பு­கள் எது­வும் இல்லை என்று ரணில் கூறி­யுள்­ளார்.

அப்­ப­டி­யென்­றால் சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­கள் உங்­களை விமர்­சிக்­கின்­ற­னர் அல்­லவா என்று ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் உறுப்­பி­னர்­கள் சிலர் கேள்வி எழுப்­பி­னர். இனி அவ்­வாறு நடக்­காத வகை­யில் அரச தலை­வர் நட­வ­டிக்கை எடுப்­ப­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளார் என்று ரணில் பதி­ல­ளித்­தார்.

இந்­தக் கூட்­டத்­தில் கருத்து வெளி­யிட்ட ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மரிக்­கார், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தொடர்­பாக வெளி­யி­டப்­பட்ட அறிக்கை தவ­றாக திரி­பு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்­றும் அல்­லது தவ­றாக அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளது என்­றும் தெரி­வித்­துள்­ளார்.

பிக்­பொக்­கட் அரச தலை­வர் என்று தாம் கூற­வில்லை என்­றும், மகிந்த ராஜ­பக்­ச­வின் சட்­டைப்­பை­யில் இருந்தே, மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பிக்­பொக்­கட் அடித்­தோம் என்றே கூறி­னேன் என்­றும் அவர் விளக்­கி­யுள்­ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget