மீண்டும் ஒரு கொரியப் போருக்கு அமெரிக்கா சதி செய்து வருகிறது என வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.இதுதொடர்பாக வட கொரிய வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த 1950-களில் நடந்த கொரியப் போரில் வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்காவின் அணியில் இணைந்த 20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ஜனவரி 15, 16-ம் தேதிகளில் கனடாவில் நடைபெற்றது. இதில் ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளும் பங்கேற்றுள்ளன. இதில் பேசிய அமெரிக்க அமைச்சர், வட கொரியாவுக்கு எதிராக கூடுதல் அழுத்தம் தரவேண்டும் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
வட கொரியாவுக்கு எண்ணெய், தொழில்துறை பொருட் கள் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தவேண்டும், வட கொரியா அணு ஆயுதத் திட்டத்தை நிறுத்தும் வரையில் வட கொரியத் தொழிலாளர்களை திருப்பி அனுப்பவேண்டும் என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன.
கொரிய தீபகற்பத்தில் மேலும் ஒரு போரை உருவாக்கும் வகையில் அமெரிக்க சதி செய்கிறது என்பது அந்தக் கூட்டத்தில் பேசிய பேச்சு மூலம் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் கொரியா இடையேயான தற்போதைய அமைதி முயற்சி களுக்கு உலக அளவில் ஆதரவு கிடைத்துள்ளது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறியதாக சீனாவின் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது
Post a Comment