
சூர்யா நடித்துள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை அடுத்து சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. படத்தின் நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்தப் படத்தை அடுத்து சூர்யா மீண்டும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளார். 'அயன், மாற்றான்' படங்களை அடுத்து இருவரும் மீண்டும் இணைய உள்ள படத்தில் ஹிந்தி நடிகரான அமிதாப்பச்சனை நடிக்க வைக்க இப்போதே பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துவிட்டார்களாம்.
மிகவும் பிஸியாக இருக்கும் அமிதாப்பச்சன் இதுவரை தமிழ்ப் படங்களில் நடித்தது இல்லை. இப்போதுதான் சிரஞ்சீவி நடிக்கும் தெலுங்குப் படமான 'சை ரா' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்தப் படம் மூலம்தான் தென்னிந்தியத் திரையுலகம் பக்கம் வருகிறார். அவரை தமிழ்ப் படத்திலும் எப்படியாவது நடிக்க வைத்துவிட வேண்டும் என சூர்யா, கே.வி. ஆனந்த் தரப்பு முயற்சித்து வருகிறார்களாம்.
தமிழ்ப் படங்கள் மீதும், தமிழ்க் கலைஞர்கள் மீதும் அதிக ஆர்வம் கொண்டுள்ள அமிதாப்பச்சன் தமிழ்ப் படத்தில் நடிக்க சம்மதித்தால் அந்தப் படம் இந்திய அளவிலும் அதிகம் கவனிக்கப்படும் படமாக அமையும்.
Post a Comment