Ads (728x90)

ஊழல், மோச­டி­களை மூடி­ம­றைக்க கூட்டு அர­சி­லி­ருந்து சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சியை வெளி­யேற்­றி­விட்டு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் கூட்டு  எதி­ர­ணி­யும் இணைந்து ஆட்­சி­ய­மைக்க சதித்­திட்­டம் தீட்­டி­யுள்­ளன.
இவ்­வாறு அமைச்­சர் மகிந்த அம­ர­வீர குற்­றஞ்­சாட்­டி­னார்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­மை­ய­கத்­தில் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­தா­வது-,

மத்­திய வங்­கி­யில் இடம்­பெற்ற பிணை­முறி மோசடி தொடர்­பில் விசா­ர­ணை­செய்ய அரச தலை­வர் ஆணைக்­குழு வொன்றை மைத்­தி­ரி­பால அமைத்­தார். அந்­தக் குழு­வால் ஒன்­றும் நடை­பெ­றப்­போ­வ­தில்லை என்று பெரி­ய­ள­வி­லான பரப்­பு­ரை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. இப்­போது இலங்கை வர­லாற்றை இந்த அறிக்கை மாற்­றி­ய­மைத்­துள்­ளது.

இந்த மோச­டியை மக்­க­ளி­டம் கொண்­டு­செல்­வ­தில் ஊட­கங்­கள் பெரும் பங்கை வகித்­துள்­ளன. கடந்த காலத்­தில் பல ஆணைக்­கு­ழுக்­க­ளும், கோப் குழுக்­க­ளும் அமைக்­கப்­பட்டு ஊழல், மோச­டி­கள் தொடர்­பில் விசா­ர­ணை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.

கடந்த காலத்­தில் 30ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா மதிப்­பி­லான மோச­டி­யை­யும் நாங்­கள் கோப் குழு மூலம் கண்­டு­பி­டித்­தி­ருந்­தோம். அந்த அறிக்­கை­களை ஆணைக்­கு­ழுவை நிய­மித்­த­வர்­கள் கூட பார்த்­தி­ருக்­க­மாட்­டார்­கள். நேற்­றுத்­தான் இரண்­டா­வது ஒப்­ப­ரே­சனை மைத்­திரி ஆரம்­பித்­துள்­ளார்.

மறு­பு­றத்­தில் பெரிய நிதி மோச­டி­கள் தொடர்­பில் விசா­ரணை மேற்­கொண்ட அரச தலை­வர் ஆணைக்­கு­ழு­வின் 34 அறிக்­கை­க­ளும் கிடைத்­துள்­ளன. அதில் குற்­றம் சுமத்­தப்­பட்­ட­வர்­க­ளில் பெரும்­பா­லா­ன­வர்­கள் சுதந்­தி­ரக் கட்­சி­யி­னர். அவர்­கள் தற்­போது வேறு ஒரு தரப்­பு­டன் உள்­ள­னர்.

எவ­ராக இருந்­தா­லும் மைத்­திரி கட்­டா­யம் அதி­யுச்ச தண்­ட­னையை வழங்­கும் வகை­யில் செயற்­ப­டு­வார்.கூடிய விரை­வில் வழக்­கு­கள் தொடுக்­கப்­பட்டு விரை­வில் மோச­டி­யா­ளர்­க­ளுக்­குத் தண்­டனை வழங்­கப்­ப­டும் வகை­யில் சிறப்பு நீதி­மன்­ற­மொன்றை அமைக்­க­வும் ஆலோ­சிக்­கப்­பட்­டுள்­ளது.
ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் கூட்டு எதி­ர­ணி­யும் இணைந்து கூட்டு அர­சி­லி­ருந்து சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சியை வெளி­யேற்­றி­விட்டு அரசை அமைக்க சதித்­திட்­ட­மொன்­றைத் தீட்­டி­யுள்­ள­னர். நாங்­கள் அர­சி­லி­ருந்து வெளி­யே­றி­னால் சக்­தி­வாய்ந்த ஐக்­கிய தேசி­யக் கட்சி அரசே அமை­யும்.

அதற்­கா­கவே கூட்டு எதி­ர­ணி­யில் உள்­ள­வர்­க­ளும், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­ன­ரும் அர­சி­லி­ருந்து எம்மை வெளி­யேற வேண்­டும் என்று கூறு­கின்­ற­னர். கூட்டு எதி­ர­ணி­யில் சிலர் சிறி­கொத்­தா­வி­லும், அல­ரி­மா­ளி­கை­யி­லும் பேசு­கின்­ற­னர். நாங்­கள் அர­சில் இருப்­ப­தால்­தான் மைத்­திரி வலு­வு­டன் உள்­ளார் – என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget