Ads (728x90)

“1044 தொண்­டர் ஆசி­ரி­யர்­கள் நேர்­மு­கத் தேர்­வில் கலந்­து­கொண்­ட­போ­தும் 676 பேர் மட்­டும் தகு­தி­யு­டை­ய­வர் என்று கல்வி அமைச்­சுத் தெரி­வித்­துள்­ளது. ஆனால் அவர்­க­ளில் 182 பேருக்கு மாத்­தி­ரமே நிய­ம­னம் வழங்­க­வுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கி­றது. இது தமக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கி­றது“ என்று கூறி­யுள்ள தொண்­டர் ஆசி­ரி­யர்­கள், 676பேருக்­கும் நிய­ம­னம் வழங்­கு­மாறு கோரி­யுள்­ள­னர்.

இந்­தக் கோரிக்­கையை வடக்கு மாகாண ஆளு­ந­ரி­டம் முன்­வைத்து மனு ஒன்­றைக் கைய­ளித்­துள்­ள­னர். நேற்­று­ முன்­தி­னம் வழங்­கப்­பட்ட அந்த மனு­வில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது,676 பேரில் 182 பேரின் பெயர் விவ­ரங்­கள் மட்­டும் அண்­மை­யில் வெளி­யி­டப்­பட்­டன.

இந்த விட­யம் சம்­பந்­த­மாக வடக்கு மாகா­ணக் கல்வி அமைச்­சர், மாகாண சபை உறுப்­பி­னர்­கள் மற்­றும் வடக்கு மாகாண ஆளு­நர் ஆகி­யோ­ரி­டம் சென்று எமது கோரிக்­கை­களை முன்­வைத்­த­போது அவர்­கள் தகு­தி­யு­டைய676 பேருக்­கும் ஒரே மேடை­யி­லேயே நிய­ம­னம் வழங்க கொழும்பு கல்வி அமைச்­ச­ரு­டன் பேசி முடி­வெ­டுப்­ப­தாக எமக்கு உறுதி மொழி கூறி­யி­ருந்­த­னர்.

தேர்­தல் காலப்­ப­குதி நிறை­வு­டன் 676 பேருக்கு நிய­ம­னம் வழங்­கு­வ­தாக உறுதி செய்­யப்­பட்­டது. தற்­போது 182 பேருக்­கு­ரிய நிய­ம­னங்­கள் வழங்­கு­வ­தற்­கு­ரிய ஏற்­பா­டு­கள் நடை­பெ­று­கின்­றன என்று அறிந்­துள்­ளோம். நீண்­ட­கா­ல­மாக வேத­ன­மின்­றிப் பாட­சா­லை­க­ளில் கட­மை­யாற்­றும் நாம் இத­னால் மன உழைச்­ச­லுக்கு ஆளா­கி­யுள்­ளோம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget