Ads (728x90)

இன்று முதல் தேசிய அரசாங்­கத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்கு சுதந்­தி­ரக்­கட்சி முடிவெடுத்துள்­ள­தா­க ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பேச்­சாளர் பிரதி சபா­நா­யகர் திலங்க சும­தி­பால அறி­வித்­தி­ருக்­கிறார்.

அது மட்­டு­மின்றி புதிய பிர­தமர் ஒரு­வரை நிய­மிப்­பது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உயர் நீதி­மன்­றத்தின் அபிப்­பி­ர­யாத்தை கோர­வுள்­ள­தா­கவும் திலங்க சும­தி­பால குறிப்­பிட்­டுள்ளார்.

ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேற்­று­மாலை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தை­ய­டுத்தே    சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் இந்த  தீர்­மா­னத்தை எடுத்­துள்­ளனர். 

தேசிய அர­சாங்த்தில் ஏற்­பட்­டு­ளள்ள நெருக்­கடி நிலை­மை­யா­னது உச்ச நிலையை  அடைந்­துள்­ள­தை­ய­டுத்து  பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க மற்றும் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய ஆகி­யோ­ருடன்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று  இரவு நடத்­திய   பேச்­சு­வார்த்­தையின் பின்னர்    ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யு­ட­னான சந்­திப்பு நடை­பெற்­றது. 

இதில்   தயா­சிறி ஜய­சே­கர   திலங்க சும­தி­பால சுசில் பிரேம்­ஜ­யந்த உள்­ளிட்ட கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் கலந்­து­கொண்­டனர்.     இந்த சந்­திப்­பின்­போதே      நல்­லாட்சி தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்கு   சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி தீர்­மா­னித்­துள்­ளது.

இது தொடர்பில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பேச்­சாளர் பிரதி சபா­நா­யகர் திலங்க சும­தி­பால கூறி­யுள்­ள­தா­வது

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை வெளியான  உள்­ளூ­ராட்­சி­மன்றத்  தேர்தல் முடி­வு­களின் பின்னர் தேசிய அர­சாங்­கத்தில் பாரிய  நெருக்­கடி நிலை ஏற்­பட்­டுள்­ளது.    பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பதவி வகிக்­கின்ற அர­சாங்­கத்தில்     தாம்  இருக்­க­மாட்டோம் என்று  சுதந்­திரக் கட்சி  தெரி­வித்­த­தை­ய­டுத்து     பிர­த­மரை பதவி வில­கு­மாறு  ஜனாதிபதி  கோரியிருந்தார்.

எனினும்   பிரதமர் பதவி விலகுவதற்கு  மறுத்துவிட்டார். இந்நிலையில் இரண்டு கட்சிகளும்    தொடர்ந்தும்    தனித்து ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றன. எனினும்   தற்போது  சிறிலங்கா சுதந்திரக் கட்சி    தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளது

Post a Comment

Recent News

Recent Posts Widget