உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டையில் யாழ்ப்பாணத்துக்குப் பதிலாக யாங்ப்பாணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தேர்தல்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள இந்த வாக்காளர் அட்டையில், யாழ்ப்பாணம் என்று குறிப்பிடப்படுவதற்குப் பதிலாக யாங்ப்பாணம் என்று குறிப்பிடப்பட் டுள்ளது.
கொழும்பு தேர்தல் திணைக்களத்தால் வாக்காளர் அட்டை அச்சிடப்பட்டு அனுப்பப்பட்டது என்றும், 4 லட்சத்து 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்காளர் அட்டையில் இனித் திருத்தம் செய்வது கடினம் என்றும் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment