Ads (728x90)

லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட லண்டனிலுள்ள இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கலந்துகொண்ட இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து இதனை தெரிவித்தார்.

இராஜதந்திர ரீதியில் இடம்பெறும் வழமையான நடைமுறைகளுக்கமைய குறித்த விவகாரம் தொடர்பில் விளக்கம் ஒன்றை பெறுவதற்காகவே அவர் இலங்கைக்கு வரவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget