கொழும்பு மாநாகரசபையின் முதல்வராக தெரிவுசெய்யப்பட்டுள்ள திருமதி ரோசி சேனநாயக்க இன்று தனது பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.கொழும்பு மாநகர சபைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள முதலாவது பெண்முதல்வர் இவராவார்.
இம்முறை இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில், கொழும்பு மாநாகர சபையை ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றது.
ஐக்கிய தேசிய கட்சி 131,353 வாக்குகளை பெற்று 60 ஆசனங்களை கைப்பற்றியதோடு, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சி 60,087 வாக்குகளை பெற்று 23 ஆசனங்களை பெற்றது.
Post a Comment