ஊடகவியலாளர்களுக்கான ஜனாதிபதி ஊடகவிருது வழங்கல் நிகழ்வொன்றினை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இலங்கை ஊடகவியலாளர்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பணிகள் மற்றும் அவர்களின் பங்களிப்புகள் என்பவற்றை மதிப்பிடுவதற்காக ஊடகவியலாளர்களுக்கான ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் வைபவம் ஒன்றை 2018ம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் நடாத்துவது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Post a Comment