Ads (728x90)

இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனமானது, எரிபொருள் விலையை அதிகரிக்கக் கோரி, விலை சூத்திரப் பட்டியல் ஒன்றை அமைச்சரவைக்கு அனுப்பி வைத்துள்ளது.

அமைச்சரவையின் அனுமதியை பெற்றவுடன் இம்மாதத்திலிருந்து எரிபொருளுக்கான விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருளின் விலையை கட்டாயமாக உயர்த்த வேண்டும் என, பெற்​றோலிய வள துறை அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்படி தமிழ் – சிங்கள புத்தாண்டு நிறைவடைந்த பின்னர், எரிபொருளுக்கான விலை அதிகரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget