இலங்கையின் புதிய தேசிய வரைபடம் அடுத்த மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படவுள்ளது.இம்முறை மாற்றங்கள் பலவற்றை உள்ளடக்கியவாறு தேசிய வரைடம் வரையப்படும் என்று நில அளவையாளர் நாயகம் ஜி.என்.பி.உதயகாந்த தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிலப்பரப்பில் சேரும் கொழும்பு துறைமுக நகரத்தையும், ஏனைய பாகங்களில் ஏற்பட்ட புவிச்சரிதவியல் மாற்றங்களையும் உள்ளடக்கும் வகையில் புதிய வரைபடம் உருவாக்கப்படும் என்று திரு.உதயகாந்த மேலும் கூறினார்.
Post a Comment