
இதே போன்று மூடங்கியிருந்த தபால் சேவைகள் இன்று காலை முதல் ஆரம்பமாகின.தபால் ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்று நள்ளிரவு முதல் முடிவுக்கு வந்தது.
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து 24 தபால் ஊழியர் சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு இருந்தன.
16 நாட்களாக நடைபெற்று வந்த பணிப்பகிஷ்கரிப்பு முடிவுற்றமையை அடுத்து ஊழியர்கள் தபால் விநியோக பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.2 தினங்களுக்குள் தேங்கியிருந்த தபால்கள் விநியோகிக்கப்பட்டு விடும் என்று தபால் ஊழியரகள் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் மாத்திரம் 25000 ஆயிரம் கிலோகிராமிற்கு அதிகமான தபால் பொருட்கள் தேங்கியிருந்தன.
நேற்று இரவு முதல் 6 லொறிகளை பயன்படுத்தி இவற்றை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment