Ads (728x90)

அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில்களில் வாகனங்களை சோதனையிடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பழுதடைந்த வாகனங்கள் நெடுஞ்சாலைக்குள் பிரவேசிப்பதால் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையும், வாகனங்கள் கோளாறுகளுக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களும் அதிகரித்துள்ளன.

இதனை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைகளுக்;குள் பிரவேசிக்கும் நுழைவயில்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தப் போவதாக போக்குவரத்து மற்றும் வீதிப்பாதுகாப்பு தொடர்பான பணிப்பாளர் எஸ்.பி.இந்திய ஹப்புகொட தெரிவித்தார்.

இந்த உத்தியோகத்தர்கள் வாகனங்களின் சுக்கான்களையும், பிறேக் கருவிகளையும், ஆசனப் பட்டிகளையும், வேகமாணிகளையும் சோதிப்பார்கள். நியம தராதரங்களுக்கு அமைவாக டயர்களை கொண்டிராத வாகனங்கள் நெடுஞ்சாலைக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டா என்றும் தெரிவித்தார்.

அதிகவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்கையில் கோளாறுகள் ஏற்பட்டால் அழைக்க வேண்டிய இலக்கம் 1969 என்பதாகும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget