Ads (728x90)

திருகோணமலையை நகர சுற்றுலா மற்றும் வர்த்தக நகரமாக அபிவிருத்தி செய்வதற்கு புதிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நகர சபை உள்ளிட்ட பிரதேச சபைகள் இதற்காக ஒன்றிணைந்திருப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

முழு வசதிகளைக் கொண்ட சர்வதேச மாநாட்டு மண்டபம், விளையாட்டு மைதானம், சுற்றுலா விற்பனை வலயம் உள்ளிட்டவை இதில் இடம்பெறவுள்ளன.

சிங்கப்பூர் நிறுவனமொன்று இதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது. புதிய நகர வீடமைப்புத் தொகுதியொன்றும் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget