
நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அமைச்சர் எஸ்பி நாவின்ன அனைத்து நாடுகளுக்கும் பயன்படுத்தப்படும் 10 இலட்சம் கடவுச்சீட்டை புதிதாக பெற்றுக்கொள்ளும் கோரிக்கைக்காக அனுமதிக்கான பரிந்துரையை அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.
இதற்கு அமைச்சரவை அதிகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைவாக வெளிநாடுகளுக்கு பயன்படுத்தப்படும் புதிய கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த கடவுச்சீட்டுக்கள் கிடைக்கும் வரையில் மத்தியகிழக்கு நாடுகளுக்கு பயன்படுத்தப்படும் கடவுச்சீட்டுக்கள் அனைத்து நாடுகளுக்கான கடவுச்சீட்டுக்களாக பயன்படுத்தப்பட்டுவருவதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் எமது செய்திப்பிரிவிற்கு மேலும் தெரிவித்தார்.
Post a Comment