ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளது.கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராச்சி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க போலியான ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கிற்கு சாட்சி வழங்குவதற்கே ஜனாதிபதியும், பிரதமரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பில் சாட்சி வழங்குவதற்காக வருகை தருமாறு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வழங்கப்பட்டுள்ள ஐந்தாவது அறிவித்தல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment