புதிதாக 464 கிராம உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் வைபவம் இன்று அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.அண்மையில் இடம்பெற்ற போட்டிப் பரீட்சையின் பின்னர் நேர்முக பரீட்சை மூலம் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று உள்நாட்டலுவல்கள் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னரும் ஆயிரத்து 600 கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment