Ads (728x90)

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்ட அமைச்சரவை பட்டியலை நிராகரித்த ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு பதில் வழங்கும் வகையில் அடுத்த கட்ட நடவடிக்கைளை முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு எப்படியாவது அமைச்சுப் பதவியை வழங்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் ரணில் புது வியூகம் அமைத்துள்ளதுடன், அவர்களுக்கு அமைச்சுப் பதவியை வழங்குவதற்கான பிரேரணையினை பாராளுமன்றில் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட குறித்த பிரேரணையை ஜனாதிபதி நிராகரித்தாலும் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடத் தீர்மானிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget