Ads (728x90)

போலி தகவல்களை வெளியிடும் கறுப்பு ஊடகங்களை அம்பலப்படுத்துவேன் என நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கறுப்பு ஊடகங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கான அபராதத்தை செலுத்துவதற்கு காசோலைகளை தயாராக வைத்திருக்குமாறு குறித்த ஊடகங்களுக்கு நினைவுபடுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜித் விஜயமுனி சொய்சா உட்பட அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் நிராகரிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அவ்வாறான பெயர் பட்டியல் ஒன்றை தான் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவில்லை என பிரதமர் கூறினார். இல்லாத பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காக சிலர் குழுக்களாக செயற்படுவதாக பிரதமர் கூறியுள்ளார்.

அவ்வாறான ஊடகங்களை தான் வெளிப்படுத்துவதாகவும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், அது ஊடக அடக்குமுறை அல்ல எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget