நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வார் என நாமல் ராஜபக்ஷ அவரது ட்விற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஹர்ச டி சில்வா மற்றும் ருவான் விஜயவர்தன ஆகியோரும் தெரிவித்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அவரது அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்குவதற்கு உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment