பிரதமர் மற்றும் அமைச்சர் பதவிகளில் கடமைகளை முன்னெடுக்க தமக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் முகமாக உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவினால் தாக்கல் செய்த விசேட மேன்முறையீட்டு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அமைச்சரவை பதவிகளில் நீடிப்பதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கு அமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் குறித்த விசாரணைகள் நிறைவடையும் வரை பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் நீடிப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்குவதற்கு உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
இதன்போது பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையுத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்படுவதாகவும் அவர்கள் தமது அதிகாரங்களை செலுத்த முடியதெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த விசேட மேன்முறையீட்டு மனுவை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம் குறித்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனெக அலுவிகார மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் 121 பாராளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் பிரதமரும், அமைச்சரவையும் அந்தப் பதவிகளை வகிப்பதை தடைசெய்து மேன்முறையீட்டு நீதிமன்றால் இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment