Ads (728x90)

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடித்து அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனினால் 2022.01.10ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் பதவிக்காலம் 2023 மார்ச் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் ஓராண்டு பிற்போட்டப்பட்டால் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி கட்டாயமாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதுவரை தற்போது ஆட்சியில் உள்ள சபைகளின் ஆட்சி அதிகாரம் மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிக்க மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்துள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget