வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை இங்குள்ள காட்சிக் கூடங்களில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
பற்றிக் கைத்தறி ஆடைகள், கருப்பட்டி, ஒடியல் உள்ளிட்ட பனை உற்பத்திப் பொருட்கள், பெறுமதி சேர்க்கப்பட்ட தென்னை உற்பத்திப் பொருட்கள், நல்லெண்ணை, ஊதுபத்தி, பாரம்பரிய உணவு உற்பத்திகள், மட்பாண்ட உற்பத்திகள், கைப்பணிப்பொருட்கள் உள்ளிட்ட உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் என்பன இவ்வர்த்தக சந்தையில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று காலை 10.00 மணியளவில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமான இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, பற்றிக் துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர், யாழ் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment