Ads (728x90)

கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விபரங்களை உள்ளடக்கிய கையடக்கத் தொலைபேசி செயலியொன்று உருவாக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர்  அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டமையை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் இலத்திரனியல் அடையாள அட்டை ஒன்றை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கண்டியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த கையடக்கத் தொலைபேசி செயலி ஊடாக இலத்திரனியல் அடையாள அட்டையொன்றை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget