Ads (728x90)

மக்கள் போராட்டத்தை திசை திருப்ப நாடாளுமன்ற பகுதியில் போராட்டக்காரர் போர்வையில் களமிறக்கப்பட்டுள்ள வேறொரு குழு அட்டகாசம் என்று காலிமுகத்திடல் போராட்டக்குழு அறிவித்துள்ளது.

எனவே நாடாளுமன்றப் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் காலிமுகத்திடல் வரும் படி உணர்வுள்ள மக்களுக்கு காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜூலை 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியிலிருந்து கோத்தாபய ராஜபக்ச விலகுவதாக அறிவித்தார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன ஜூலை 9ஆம் திகதி அறிவித்த போதும் ஜூலை 14ஆம் திகதி மலர்ந்துள்ள நிலையில் அவரது பதவி விலகல் கடிதம் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் உணர்வுள்ள மக்கள் போராட்டத்தை குழப்ப சூழ்ச்சி நடைபெறுவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget