Ads (728x90)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

13ஆம் திகதி மாலைதீவிற்கு தப்பி சென்றிருந்த ஜனாதிபதி, இன்று 14ஆம் திகதி  காலை மாலைதீவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு சொந்தமான எஸ்.வி.788 என்ற விமானத்தில் சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

சிங்கப்பூர் நோக்கி பயணிக்கும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து சவுதி அரேபியாவுக்கு செல்லவுள்ளதாக மாலைதீவு அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்துள்ளன.



Post a Comment

Recent News

Recent Posts Widget