Ads (728x90)

இலங்கை மின்சார சபை, பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் கொலன்னாவ எண்ணெய் சேமிப்பு முனையத்தில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் வினைத்திறன் அற்றவர்கள் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இங்கு பணியாற்றும் 4,200 ஊழியர்களுக்கு பதிலாக 500 செயலில் உள்ள ஊழியர்களால் அந்த நிறுவனங்களில் வினைத்திறனை உருவாக்க முடியும்.

26,000 இலங்கை மின்சார சபை ஊழியர்களை பாதியாக குறைக்க முடியும். திறமையற்ற தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் வளர்கின்றன. இலங்கையில் உள்ள பெரும்பாலான அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது இன்றியமையாதது.

அரசியல் தீர்மானங்கள், அரசியல் நியமனங்கள், தவறான நிர்வாகம் மற்றும் இயலாமை என்பனவே அரச நிறுவனங்களின் வீழ்ச்சிக்குக் காரணம்.

அரச துறையில் பணியாற்றும் பல ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவார்கள் அல்லது தனியார் துறை வேலைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் எனவும் தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget