Ads (728x90)

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை தடுத்து நிறுத்தவும், கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுதலை செய்யக் கோரியும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றது. 

போராட்டத்தை கலைப்பதற்காக மருதானை டீன்ஸ் வீதிக்கு அருகில் பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்ததுடன் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் விரட்டிச் சென்று 25 பேரை கைது செய்துள்ளனர்.

மருதானையிலிருந்து நேற்று காலை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், குறித்த போராட்டத்திற்கு எதிராக பெறப்பட்ட தடை உத்தரவை போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் வாசித்து காட்டியுள்ளனர்.

ஆர்ப்பாட்டப் பேரணி தடை உத்தரவை மீறி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget