Ads (728x90)

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ள நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 05 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இணையவழி மூலம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு  www.ugc.ac.lk  என்ற இணையத்தளத்தின் ஊடாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 05 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம். வழிகாட்டல் நூலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தின் ஊடாகப் தரவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும்.

மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக விண்ணப்பப்படிவம் மற்றும் அது குறித்த தெளிவுபடுத்தல்கள் அடங்கிய வழிகாட்டல் நூல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட புத்தகசாலைகள் ஊடாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் விநியோகிக்கப்படும்.

அதேபோன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழ், சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் அனைத்திலும் அவ்வழிகாட்டல் நூலைக் கொள்வனவு செய்யக்கூடிய புத்தகசாலைகளின் விபரங்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் 011-2695301 அல்லது 011-2695302 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு அவசியமான தெளிவுபடுத்தல்களைக் பெற்றுக்கொள்ள முடியும். 


Post a Comment

Recent News

Recent Posts Widget