எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பிரேமஜயந்த, அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.
சிறுவர்கள் மட்டத்தில் அதிக ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நாடுகளில் இலங்கை 06 வது இடத்தில் இருப்பதாக யுனிசெஃப் அறிக்கையை கருத்தில் கொண்டு மதிய உணவு திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
நாங்கள் இந்த அறிக்கையின் மீது கவனம் செலுத்துவோம். 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இலவச மதிய உணவை வழங்குவோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
Post a Comment