மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
மாவின் விலை அதிகரித்துவிட்டது. மாவுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை இல்லாத காரணத்தினால் இஷ்டப்படி மாவின் விலை ஏற்றப்படுகின்றது. பாணிண் விலையும் அதிகரித்து கொண்டிருக்கின்றது.
யாழில் ஒரு கிலோமா 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் பாண் மற்றும் மாவின் விலையை கட்டுப்படுத்த முடியாதநிலை ஏற்படும். உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினராலும் இவ்விலையேற்றத்தினை கட்டுப்படுத்த முடியாதநிலை ஏற்படும்.
வெதுப்பக உற்பத்திகளின் சகல மூலப் பொருட்களும் விலேயேறியுள்ளன. அதன் காரணமாகத்தான் பாண் மற்றும் பேக்கறி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்துள்ளன. பிறீமா நிறுவனம் நமக்கு வழங்கிய மாவின் அளவினை தற்பொழுது குறைத்துள்ளது.
பாண் தான் பொதுமக்களின் முக்கியமான உணவு. அதற்கு முதலில் விலை நிர்ணயம் செய்யுங்கள். அதைவிடுத்து விட்டு முட்டையை பற்றி கதைத்துக் கொண்டிருப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை.
இந்த நிலை தொடருமாக இருந்தால் வரும் நாட்களில் பேக்கரியினை மூட வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளது. கொழும்பில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment