Ads (728x90)

இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் கடன் சீரமைப்பிற்கு இணங்க மறுத்தால் இலங்கையின் நெருக்கடி தீவிரமடையும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனா மேற்கத்தைய நாடுகளுடன் இணைந்து செயற்படாது என்ற கரிசனைகளிற்கு மத்தியில் சர்வதேச நாணய நிதிய அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டின் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் டொலரை வழங்குவது என்றால் சீனா உட்பட இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் அனைத்தும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு இணங்க வேண்டும்.

கடன் வழங்கிய ஒரு நாடு உத்தரவாதம் அளிக்க மறுத்தாலும் அது இலங்கையின் நெருக்கடிகளை தீவிரப்படுத்தும், மீளதிருப்பி கொடுக்கும் திறனை பாதிக்கும் என சர்வதேச நாணய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவின் சிரேஷ்ட அதிகாரி பீட்டர் புரூவர் தெரிவித்துள்ளார்.

சீனா கொழும்பின் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன நடக்கும் என்ற செய்தியாளரின் கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்

நெருக்கடி தீவிரமடைந்தால் கடன்களை செலுத்துவதற்கான வளங்கள் குறைவடையும் எனவும் தெரிவித்துள்ள அவர், எனவே இலங்கையுடன் ஒத்துழைப்பது கடன் வழங்கிய நாடுகள் அனைத்தினதும் நலனிற்கு உகந்த விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget