இன்று முதல் நீர் மற்றும் கழிவு நீர் கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வருகின்றது.
இதற்கான சிறப்பு வர்த்தமானி அறிவித்தலை நீர் வழங்கல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த வாரம் வெளியிட்டிருந்தார்.
இக்கட்டண அதிகரிப்பின்படி வீட்டு தேவைகளுக்கான நீர் நுகர்வுக்கு முதல் 05 அலகுகளுக்கு 20 ரூபாவும், சேவைக் கட்டணமாக 300 ரூபாவும் அறவிடப்படும்.
06 முதல் 10 அலகுகளுக்கு பயன்படுத்துவோருக்கு ஒரு அலகுக்கு 27 அறவிடப்படும். அதே நேரம் சேவைக் கட்டணம் 300 ரூபா அறவிடப்படும்.
11 முதல் 15 அலகுகளுக்கு ஒரு அலகுக்கு 34 ரூபாவும், சேவைக் கட்டணம் 300 ரூபாவும் அறிவிடப்படும்.
16 முதல் 20 அலகுகளை உபயோகிக்கும் வீட்டு உபயோகிப்பவர்களுக்கு அலகு ஒன்றிற்கான கட்டணம் 68 ரூபா,சேவை கட்டணம் 300 ரூபா அறவிடப்படும்.
26 முதல் 30 அலகுகள் வரை பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு அலகு ஒன்றுக்கு 150 ரூபாவும், சேவைக்கட்டணமாக 900 ரூபாவும் அறவிடப்படும்.
31 முதல் 40 அலகுகளுக்கு ஒரு அலகு கட்டணம் 179 ரூபாவும், 300 ரூபா சேவைக்கட்டணமும் அறவிடப்படும்.
41 முதல் 50 அலகுகளுக்கு அலகு ஒன்றுக்கு 204 ரூபாவும், சேவைக் கட்டணம் 2,400 ரூபா ஆகவும் அறவிடப்படும்.
51 முதல் 75 அலகுகளை பயன்படுத்தினால் ஒரு அலகுக்கு 221 ரூபாவும், சேவைக் கட்டணம் 2,400 ரூபாவும் அறவிடப்படும்.
75 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு அலகு ஒன்றுக்கு 238 ரூபாவும், சேவைக்கட்டணம் 3500 ரூபாவும் அறிவிடப்படும்.
நுகர்வோர் தங்களின் நீர் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
30 நாட்களுக்குள் நீர் கட்டணத்தை நுகர்வோர் செலுத்தத் தவறினால், கட்டண மதிப்பில் 2.5 சதவீதம் கூடுதல் கட்டணம் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment