Ads (728x90)

வடக்கு மாகாணத்தில் சரணாலயம் ஒன்றை அமைப்பதற்கு 100 ஏக்கரில் பொருத்தமான நிலத்தை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் மஹிந்த அமரவீரவை பணித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சரணாலயங்கள் மற்றும் மிருகக்காட்சிசாலைகளை பார்வையிட தெற்கு நோக்கி வருகை தரவேண்டிய சூழல் காணப்படுகிறது. வடக்கில் சரணாலயம் அமைந்தால் அவர்களுக்கு அது நன்மை பயக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அதற்கு பொருத்தமான காணிகளை கண்டறியுமாறு வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget