இலங்கை கடற்பகுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் எரிந்ததால் மீனவ மக்களுக்கு ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சுற்றுச்சூழல் விஞ்ஞானி அஜந்த பெரேரா உள்ளிட்டோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்த போதே உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு எஸ்.துரைராஜா, மகிந்த சமயவர்தன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி கிரிஸ்மால் வர்ணசூரியவும், சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதியின் சட்டத்தரணி நெரின்புள்ளே ஆகியோர் ஆஜராகினர்.
Post a Comment