இவ்வாறு பிடிக்கப்பட்ட நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் நீர் நாய் வகையைச் சேர்ந்தது ஆகும். இது தோற்றத்தில் பெரிய உடலைக் கொண்டிருக்கிறது. இது பொதுவாக லெட்ரொகலே இனத்தின் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இது இந்திய துணைக் கண்டத்திலும், தென்கிழக்காசிய நாடுகளிலும் காணப்படுகிறது. மற்றய நீர் நாய்களை விட இதன் மேல் உள்ள முடிகள் குறைவாகவும், மிருதுவாகவும் காணப்படுகிறது. இவை ஆற்றில் நீந்தி மீன்களை பிடிக்க ஏதுவாக இவற்றின் கால்களில் வாத்துக்களுக்குப் போல விரலிடைத் தோல் உண்டு. இவற்றின் பட்டையான நீண்ட வாலானது துடுப்புப்போல நீந்தப் பயன்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் உள்ள தனியார் வாகன திருத்தும் இடத்திற்கு வழி தவறி சென்ற நிலையில் பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment