Ads (728x90)

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த நிதியை ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை அனர்த்தத்தினால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

மேலும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளை அந்தந்த மாகாண மட்டத்தில் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹபொல தவணைக்கட்டணம் ஒன்றை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

நாடு முழுவதையும் பாதித்த சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ள பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சிரமமின்றி மீண்டும் ஆரம்பிப்பதை நோக்கமாகக் கொண்டு, மேலதிக மஹபொல தவணைக்கட்டணத்தை எதிர்வரும் 05 ஆம் திகதி வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget