Ads (728x90)

திருகோணமலையில் உள்ள கடற்கரைப் பாதுகாப்பு வலயத்தில் கடந்த 2025 நவம்பர் 16 ஆம் திகதி உரிய அனுமதியின்றி புத்தர் சிலை மற்றும் சட்டவிரோதக் கட்டுமானங்களை  அமைத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 பேரும் பிணையில் செல்ல இன்று திருகோணமலை மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், பலாங்கொட கஸ்ஸப்ப தேரர், திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களும், ஆறு பொதுமகன்களும் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

சந்தேகநபர்கள் சார்பில் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.பிணை விண்ணப்பத்தைப் பரிசீலித்த மேல் நீதிமன்றம் அவர்களை நிபந்தனையுடனான பிணையில் செல்ல உத்தரவிட்டது.


Post a Comment

Recent News

Recent Posts Widget