இந்த உடன்பாடு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவால் அங்கீகரிக்கப்பட்டவுடன், இலங்கை சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெறும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் இந்த ஏற்பாட்டின் கீழ் வழங்கப்பட்ட மொத்த நிதி உதவியானது சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும்.
இலங்கையின் இலட்சியமிக்க சீர்திருத்தத் திட்டம் தொடர்ந்து பாராட்டத்தக்க விளைவுகளை அளித்து வருகிறது.
2025 ஆம் ஆண்டில் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு 5 சதவீதம் வளர்ச்சி கண்டது. பணவீக்கம் நேர்மறை நிலைக்குத் திரும்பி, 2026 மார்ச் மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு 2.2 சதவீதமாக மீண்டுள்ளது.
மேலும், 2026 மார்ச் மாத இறுதியில் மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பு 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
Post a Comment