Ads (728x90)

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். 

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே அமைச்சர் இன்று இதனைத் தெரிவித்தார். 

மத்திய பஸ் நிலையத்திற்கு சேதம் விளைவிப்பது திட்டமிடப்பட்ட குழுக்களின் செயல் என அவர் குறிப்பிட்டார். 

பேருந்து நிலையத்தை அழிப்பது ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட நடவடிக்கையாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்தப் பேருந்து நிலையத்தைச் சேதப்படுத்த அனுமதிக்க முடியாது. எனவே பேருந்து நிலையத்தின் பாதுகாப்பு நிலைமை மேலும் அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

 

Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget