Ads (728x90)

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், தவெக தலைவர் விஜயைப் பதவியேற்குமாறு அழைக்க ஆளுநர் ஆர்லேகர் மீண்டும் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரி நேற்று ஆளுநரைச் சந்தித்த விஜய், இன்று மீண்டும் ஆளுநர் ஆர்லேகரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்களுடன் சேர்த்து மொத்தம் 113 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தமக்கு இருப்பதாக விஜய் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

எனினும், விஜய்க்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் இணக்கம் தெரிவிக்கவில்லை எனத் தெரியவருகிறது. 234 இடங்களைக் கொண்ட தமிழகச் சட்டப்பேரவையில் ஆட்சி அமைப்பதற்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும்.

தனிப்பெரும் கட்சியாகத் தவெக உருவெடுத்திருந்தாலும், தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தாமல் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது என ஆளுநர் ஆர்லேகர் மீண்டும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget